உடுமலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் - அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணின் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நடைப்பெற்றது.



திருப்பூர்: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க வேண்டும் என்றும் அமராவதி அணையில் இருந்து பயிர்களை காப்பாற்ற உயிர் தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணின் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நடைப்பெற்றது.



அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க வேண்டும். அமராவதி அணையில் இருந்து பயிர்களை காப்பாற்ற உயிர் தண்ணீர் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே அதிகாரிகள் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் திருமூர்த்திமலை அடிவார பகுதிகளில் யாணைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனத்துறையினர் மின்வேலிகளை பாராமரிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வருவாய் கோட்டாச்சியரிடம் தெரிவித்தனர்.

சம்பந்த அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோட்டாச்சியர் அறிவுறுத்தினர். உடுமலை வட்டாச்சியர் சுந்தரம், மடத்துக்குளம் வட்டாச்சியர் செல்வி,சமூகநலத்திட்டம் வட்டாச்சியர் விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டார்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...