புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு - கவுண்டம்பாளையம் MLA தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை உருமாண்டம்பாளையத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 14 வார்டு உருமாண்டம்பாளையத்தில் புதிய டாஸ்மாக் கடை துவக்குவதை கண்டித்தும், ஏற்கனவே இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த 3 அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வழியுறுத்தியும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உற்றுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



உருமாண்டம்பாளையம் பகுதியில் இதுவரை டாஸ்மாக் கடை இருந்ததில்லை என்றும், ஊருக்குள் கண்டிப்பாக டாஸ்மாக் கடை வேண்டாம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தன்ர்.

உருமாண்டம்பாளையம் உழைப்பாளர் வீதியில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் அதிகளவில் உள்ள நிலையில் டாஸ்மாக் கடை திறக்க அரசு முயற்சி செய்வதாக தெரிவித்தனர்.



மேலும் மக்கள் பயணத்துக்கு இருந்த பேருந்து எண் 97 மற்றும் S9D ஆகியவற்றை மீண்டும் இயக்க கோரி பல முறை மாவட்ட ஆட்சியர், சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததை கண்டித்தும் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியல் செய்யவுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் காவல் ஆய்வாளார் ரத்தினகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் முத்திருளப்பன் உள்ளிட்ட போலிசார் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இது குறித்து உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பதாக கூறியதின் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதில் பகுதி செயலாளர் வனிதாமணி, வார்டு செயலாளர்கள் பந்தல்வீடு பிரகாஷ், சாந்திபூசன் நிர்வாகிகள் ராஜா, ரங்கநாதன், சி.டி.சி.செல்வம், ஜெகதீசன், ஸ்ரீனிவாசன், ரவி, ராஜூ, சரவணன், தாடி பழனிசாமி, நந்தகுமார், கதிரேசன், குமார், நந்தகோபால், மகளிர் அணியை சேர்ந்த பண்ணாரி, சரஸ்வதி, பார்வதி, கிருஷ்ணம்மாள், ராஜாம்மாள், பத்ராம்மாள் உட்பட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...