கோவை சிறையில் சிறை காவலர்களுக்கும் கைதிளுக்கும் மோதல் - 4 காவலர்கள் மருத்துவமனையில் அனுமதி

கோவை மத்திய சிறைச்சாலையில் வால் மேடு பிளாக் என்ற பிளாக்கில் சிறை காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 சிறை காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கோவை: சிறைக்காவலர்களுக்கும்-கைதிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் மோதலில் ஈடுபட்ட 7 கைதிகளும் சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி பிளேடை கொண்டு உடல்களை கீறி கொண்டு போராட்டம் நடத்தினர்.

கோவை மத்திய சிறைச்சாலையில் வால் மேடு பிளாக் என்ற பிளாக்கில் சுமார் 600 கைதிகள் உள்ளனர். அவர்களை கண்காணிக்க வார்டர்கள், சிறை காவலர்கள் உள்ளனர். இந்நிலையில் சிறை காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 சிறை காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலையில் தினேஷ்(எ) மண்டை தினேஷ், அய்யனார், அழகர்சாமி, ஹரிஹரன், கிஷோர்குமார், உதயகுமார், அரவிந்த் என்ற 7 கைதிகளுக்கும் சிறை காவலர்களுக்கும் இடையே ஏதோ காரணத்தால் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றி கைகளப்பாக மாறியது.



இதில் ராகுல், மோகன்ராஜ், பாபுஜான், விமல்ராஜ் ஆகிய 4 சிறை காவலர்களுக்கு காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அந்த 7 கைதிகளும் சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி பிளேடை கொண்டு உடல்களை கீறி கொண்டு போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து இதர சிறை காவலர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட கைதிகள் 20-25 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...