துடியலூரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு - 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்

கோவை துடியலூரில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வெள்ளக்கிணர் பகுதியில் செயற்கையாக வெட்ட குளத்தில் போட்டு கரைக்கப்பட்டன.



கோவை: 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் செயற்கையாக வெட்டப்பட்ட குளத்தில் 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் விநாயகர் சிலைகளை கரைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை துடியலூர் சுற்றுப்பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வெள்ளக்கிணர் பகுதியில் மாநகராட்சி சார்பில் செயற்கையாக குளம் வெட்டி அதில் 60 லாரிகள் மூலம் தண்ணீர் விட்டும் 2 போர்வெல் மூலம் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் விட்டும் சுமார் 15 லட்சம் லிட்டர் தண்ணீரில் காவல் துணை ஆணையர் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழாவையோட்டி கோவை துடியலூர் சுற்றுப் பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாக 300க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.



அதனை தொடர்ந்து விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.



இதில் இந்து முன்னணி சார்பாக விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் பி.ஜே.பி கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினார். விசர்சன ஊர்வலத்தை பி.ஜே.பி கட்சி மாவட்ட துணை தலைவர் செந்தூர் முருகேசன் தொடங்கி வைத்தார்.



கேரளா செண்டைமேளம், டோல் மற்றும் ஜமாப்புடன் ஊர்வலமாக வந்து சிலைகளை கரைத்தனர்.



அதில் இந்து முன்னணி சார்பாக 265 விநாயகர் சிலைகளும், இந்துமக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பர்சத், அனுமன் சேனா, பாரத் சேனா, ஹிந்து பாரத் சேனா, அகிலபாரத இந்து மகா மற்றும் பொதுமக்கள் சிலைகள் என 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

மேலும் வெள்ளக்கிணர் குட்டையில் நீர் இல்லாத காரணத்தால் மாநகராட்சி சார்பில் செயற்காக குளம் வெட்டி அதில் 60 லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டும், 2 போர்வெல் மூலம் ஒரு வாரம் நேரடியாக தண்ணீர் விட்டும்.



சுமார் 15 லட்சம் லிட்டர் தண்ணீரில் சிலைகள் கரைக்கபட்டன.



கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



மாநகராட்சி சார்பாக 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விநாயகர் கரைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...