துடியலூரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு - 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்

கோவை துடியலூரில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வெள்ளக்கிணர் பகுதியில் செயற்கையாக வெட்ட குளத்தில் போட்டு கரைக்கப்பட்டன.



கோவை: 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் செயற்கையாக வெட்டப்பட்ட குளத்தில் 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் விநாயகர் சிலைகளை கரைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை துடியலூர் சுற்றுப்பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வெள்ளக்கிணர் பகுதியில் மாநகராட்சி சார்பில் செயற்கையாக குளம் வெட்டி அதில் 60 லாரிகள் மூலம் தண்ணீர் விட்டும் 2 போர்வெல் மூலம் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் விட்டும் சுமார் 15 லட்சம் லிட்டர் தண்ணீரில் காவல் துணை ஆணையர் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழாவையோட்டி கோவை துடியலூர் சுற்றுப் பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாக 300க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.



அதனை தொடர்ந்து விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.



இதில் இந்து முன்னணி சார்பாக விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் பி.ஜே.பி கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினார். விசர்சன ஊர்வலத்தை பி.ஜே.பி கட்சி மாவட்ட துணை தலைவர் செந்தூர் முருகேசன் தொடங்கி வைத்தார்.



கேரளா செண்டைமேளம், டோல் மற்றும் ஜமாப்புடன் ஊர்வலமாக வந்து சிலைகளை கரைத்தனர்.



அதில் இந்து முன்னணி சார்பாக 265 விநாயகர் சிலைகளும், இந்துமக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பர்சத், அனுமன் சேனா, பாரத் சேனா, ஹிந்து பாரத் சேனா, அகிலபாரத இந்து மகா மற்றும் பொதுமக்கள் சிலைகள் என 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

மேலும் வெள்ளக்கிணர் குட்டையில் நீர் இல்லாத காரணத்தால் மாநகராட்சி சார்பில் செயற்காக குளம் வெட்டி அதில் 60 லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டும், 2 போர்வெல் மூலம் ஒரு வாரம் நேரடியாக தண்ணீர் விட்டும்.



சுமார் 15 லட்சம் லிட்டர் தண்ணீரில் சிலைகள் கரைக்கபட்டன.



கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



மாநகராட்சி சார்பாக 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விநாயகர் கரைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...