கோவையில் நிதி நிறுவன மோசடி வழக்கில் 6 கோடியை திரும்ப பெற பாதிக்கப்பட்டவர்களுக்கு அழைப்பு

நிதி நிறுவனம், ஆறு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், டெபாசிட் தொகையை திரும்ப பெற்று செல்ல, புகார்தாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: பணத்தை பெறாத டெபாசிட்தாரர்கள், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் உறுதி கடிதம் பெற்று, உரிய ஆவணங்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

கோவை, காந்திபுரத்தில் செயல்பட்டு வந்த சீனிவாசப்பெருமாள் பைனான்ஸ் நிறுவனம், 654 பேரிடம் ஆறு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு, கோவை டான்பிட் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. வழக்கு நிலுவையில் இருந்த போது, மோசடி செய்த பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அதன்படி, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு, மோசடி பணம் ஆறு கோடி ரூபாயை, நிதி நிறுவன உரிமையாளர்கள் கோர்ட்டில் திரும்ப செலுத்தினர். அந்த தொகையினை பாதிக்கப்பட்ட டெபாசிட்தாரர்கள், உரிய ஆவணங்கள் செலுத்தி, பணத்தை பெற்றுச்செல்ல அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், 48 பேர் மட்டும் பணத்தை பெற்று சென்றனர். இதுவரை பணத்தை பெறாத டெபாசிட்தாரர்கள், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் உறுதி கடிதம் பெற்று, உரிய ஆவணங்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

ஆவணங்களை வழங்கும் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...