கோவையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வு துவக்கம் - பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகளை அப்பகுதி மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர்.



கோவை: விநாயகர் சிலைகளை கரைக்க 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18 மற்றும் 19-ம் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பல்வேறு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் விநாயகர் சிலைகள் இன்றும் நாளையும் கரைக்கப்படுகின்றன.



கோவை மாவட்டத்தில் சிலைகளை கரைக்க 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



சிலைகளை வாகனங்களில் ஏற்றி வந்தவர்கள் சிலையை இறக்கி போலீசாரிடம் ஒப்படை வேண்டும். போலீசார் அந்த சிலைகளை குளத்தில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குளத்திற்குள் போலீசார் மீட்பு பணித்துறையினரை தவிர வேறு யாரும் இறங்க அனுமதி இல்லை.



மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குளங்களில் தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



பெரிய சிலைகளை ஒரு இடத்திலும், சிறிய சிலைகள் ஒரு இடத்திலும் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குளத்திற்குள் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவிலும் சிலைகள் கரைக்கப்பட்ட உள்ளதால் மின்சார விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில் கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகளை அப்பகுதி மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...