விஸ்வகர்மா ஜெயந்தி விழா - பாஜ அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா கோலாகலம்!

விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு தொடர் கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் அரசு மருத்துவமனையில் பிறந்த 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.


கோவை: தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பாக தொடர் கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா,மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவானதுதேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பாக கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 25க்கும் மேற்ப்பட்ட ஏழை கூலித் தொழிலாளர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

கோவை மாவட்ட தலைவர் T.K.ராஜேந்திர பிரசாத் தலைமையிலும், மாநிலத் துணை தலைவர் J.புவனேஷ்வரன் முன்னிலையிலும் மாநிலத் தலைவர் C.பாண்டித்துரை ஆசியுடன் குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் குடும்பம் பங்கேற்ற மாபெரும் கலை நிகழ்ச்சியும், அமைப்பு சாராதொழிலாளர்கள் விழிப்புணர்வு மாபெரும் பொதுக்கூட்டம் கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்றது.



இதில் 5 ஏழை, எளிய பெண்களுக்கு தையல் மிஷன், 2. ஆண்களுக்கு அயர்ன் பாக்ஸ், மேலும் 150க்கும் மேற்ப்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 20 நபர்களுக்கு சீருடை, கட்டிட தொழிலாளர்கள் 35 நபர்களுக்குதொழில் உபகரணங்கள், ஆசாரி தொழிலில் ஈடுபட்டு வரும் 150 நபர்களுக்குதேவையானஉபகரணங்கள் வழங்கப்பட்டன.



இதில் பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...