துடியலூரில் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் உற்சாக வழிபாடு!

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ராஜ விநாயகர், நரசிம்மவிநாயகர், நந்தி விநாயகர், இரட்டை விநாயகர், குதிரை வண்டி விநாயகர், மயில் விநாயகர், வெள்ளைமாளிகை விநாயகர், சிங்க விநாயகர் என விதவிதமான விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



கோவை: துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் சுற்றுப் பகுதிகளில் இந்து முன்னணி, விஷ்வ ஹந்து பரிசத், அகில பாரத இந்து மகா சபா உள்ளிட்ட இந்து அமைப்புகள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் பொதுமக்கள் பொதுஇடங்கள் மற்றும் சொந்த இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.



இதில் துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே பாஜக சார்பில் மாநில மகளிர் அணி துணைத்தலைவர் வத்சலா தலைமையில் வெள்ளி கருட விநாயகர் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.



தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இதேபோல, துடியலூர் அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என்.ஜி.ஜி.ஓ காலனி, குமரபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் பிரிவு, வடமதுரை, உருமாண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ராஜ விநாயகர், நரசிம்மவிநாயகர், நந்தி விநாயகர், இரட்டை விநாயகர், குதிரை வண்டி விநாயகர், மயில் விநாயகர், வெள்ளைமாளிகை விநாயகர், சிங்க விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநயாகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து கோபூஜை, அஸ்வபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேலும் வரும் அனைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து வரும் புதன் கிழமையன்று இந்த விநாயகர்கள் வெள்ளகிணர் குளத்தில் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகளுக்கு இரவு பகலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...