சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் நாளை 2500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 2500 விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்பது தெரியவந்து உள்ளது.


கோவை: கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் 11 அடிஉயர ராஜவிநாயகர் சிலை மற்றும் தெப்பக்குளம் மைதானத்தில் பிரமாண்ட வெற்றி விநாயகர் சிலை ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாநகரம்-மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம்.

அதன்படி கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகளில் இந்து முன்னணி, விசுவஇந்துபரிஷத், பாரத் சேனா, சிவசேனா, அனுமன்சேனா, சக்திசேனா, விவேகானந்தர் பேரவை, இந்து மகாசபா, இந்துஸ்தான் மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதுதவிர பொதுமக்கள், பொதுநலஅமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன.

கோவையில் விநாயகர் சிலைகளை வைக்கும் முன்பாக உரிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதற்காக பல்வேறு அமைப்புகளும் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்காக விண்ணப்பித்து உள்ளன.

அதன்படி கோவை மாநகரில் 680, புறநகரில் 1611 விநாயகர் சிலைகளை வைப்பதற்கான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்து உள்ளன. இதுதவிர பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான முயற்சிகளில் உள்ளனர். எனவே கோவை மாவட்டத்தில் ஒட்டுமொத்த 2500 விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்பது தெரிய வந்து உள்ளது.

கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் 11 அடிஉயர ராஜவிநாயகர் சிலை மற்றும் தெப்பக்குளம் மைதானத்தில் பிரமாண்ட வெற்றி விநாயகர் சிலை ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

அதற்கான ஏற்பாடுகளில் இந்து அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை யொட்டி சிறப்பு வழிபாடு-பூஜைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் இந்து அமைப்புகள் முடிவு செய்து உள்ளன. கோவை மாவட்டத்தில் வருகிற 20-ந்தேதியும், மாநகர பகுதியில் 22-ந்தேதியும் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி (விஜர்சனம்) நடக்க உள்ளது.

இதன்ஒரு பகுதியாக கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் நடக்க உள்ள ராஜவிநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பங்கேற்கிறார். காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார். தெப்பக்குளம் மைதானத்தில் வெற்றி விநாயகர் விஜர்சன ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் முன்னிலை வகிக்கிறார்.

மத்திய இணைமந்திரி முருகன் பங்கேற்று ஊர்வலத்தை தொடங்கி வைக்க உள்ளார். கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநகரம்- மாவட்ட அளவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி சுமார் 2500 போலீசார் பந்தோபஸ்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...