சனாதனத்தை வேரறுப்போம் என பதிவிட்ட தலைமை ஆசிரியர் - பள்ளி முன்பு இந்து முன்னணியினர் குவிந்ததால் பரபரப்பு!

திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் தனது முகநூல் பக்கத்தில் சனாதனத்தை வேரறுப்போம் என பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி முன்பு 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.



திருப்பூர்: சாமுண்டிபுரம் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் சனாதனத்தை வெரறுப்போம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை கண்டித்து பள்ளி முன்பு இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டு சாமுண்டிபுரம், செல்லம்மாள் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு சனாதானத்தை வேரறுப்போம் என்று பதிவிட்டுள்ளார்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியை சேர்ந்த 50 -க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளி முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வடக்கு காவல் நிலைய போலீசார் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்ற மாநகராட்சி திமுக மேயர், தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று எதற்காக இங்கு கூட்டம் என்று கேள்வி எழுப்பி சிறிது நேரம் அங்கு நின்று விட்டு அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.



பள்ளியை முற்றுகையிடுவதற்காக வந்திருந்த 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...