துடியலூரில் ஏழை கல்லூரி மாணவியின் படிப்பிற்கு உதவிய திமுக நிர்வாகிக்கு குவியும் பாராட்டு!

துடியலூரில் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் ஒரு பகுதியான அண்ணா பிறந்தநாள் விழாவில், ஏழை கல்லூரி மாணவியின் கல்லூரி படிப்பிற்கு உதவும் வகையில் அவருக்கு தேவையான பாட புத்தகங்களை திமுக நிர்வாகி தமிழ் நிதி தனது சொந்த செலவில் வழங்கினார்.



கோவை: துடியலூர் அருகே நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் ஏழை கல்லூரி மாணவியின் படிப்பிற்கு உதவியாக பாடப்புதகங்களை திமுக நிர்வாகி தமிழ் நிதி தனது சொந்த செலவில் வழங்கினார்.



திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரில் உள்ள திமுக மன்றத்தில் துடியலூர் பகுதி கழக திமுக சார்பில் முதல் நிகழ்வாக அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத் துவக்க விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு துடியலூர் பகுதிக் கழகச் செயலாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.



தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திரூருவப்படத்திற்கு ஒவ்வொருவராக மலர் தூவி மரியாதை செய்தனர்.



தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்.சி இறுதி ஆண்டு படித்து வரும் துடியலூரை சேர்ந்த கூலி தொழிலாளிகளான துரைசாமி – சரஸ்வதி ஆகியோரின் மகளான சங்கீதாவிற்கு அவர்களது குடும்ப சூழ்நிலை கருதி திமுக இரண்டாவது வட்ட துணைசெயலாளர் தமிழ்நிதி கடந்த நான்கு ஆண்டுகளாக கல்லூரி படிப்பிற்க்கு தேவையான புத்தகங்களை வருகிறார்.

அதேபோல் இந்த ஆண்டும் அண்ணா பிறந்தநாள் விழாவில் பகுதி கழக செயலாளர் அருள்குமார் மாணவியின் தாயாரிடம் இறுதி ஆண்டிற்கான புத்தகங்களை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த சரஸ்வதி உள்ளிட்ட மகளிர் கலைஞரின் மகளிர் உரிமை கிடைத்துள்ளதால் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், வட்ட செயலாளர் சண்முகம், மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி, நிர்வாகிகள் ரேவதி, ராமசாமி, ஆறுச்சாமி, அருக்காணி, மாரியப்பன், நாராயணன், சோபனா, அன்பழகன், பழனிச்சாமி, சுப்பிரமணி, கோவிந்தன், செல்வராஜ், சின்னசாமி, தனபாக்கியம், வெற்றி செல்வி, சோமசுந்தரம், பிரபாகரன், கலந்து கொண்டனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...