கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மீண்டும் பாம்பு - ஊழியர்கள் அச்சம்!

கோவை ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் அரசு கருவூல கட்டிடம் மற்றும் தேநீர் கடையின் அருகே புதர் மண்டி கிடப்பதால், அடிக்கடி பாம்பு தென்பட்டு வரும் சூழலில் அப்பகுதியில் பாம்பு ஒன்று அனைவரையும் பார்த்து சீறியதால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.



கோவை: ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள பழைய கட்டிடத்தில் அரசு கருவூலம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே தேநீர் கடையும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பழைய கட்டிடத்தின் அருகில் புதர் மண்டி கிடப்பதால் அடிக்கடி பாம்புகள் தென்படுவது தொடர் கதையாகி வருகிறது.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேநீர் கடை, கருவூலம் உள்ளிட்ட பகுதிகளில் பாம்புகள் படையெடுப்பதால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பும் கூட இந்த தேனீர் கடையில் பாம்பு ஒன்று புகுந்தது. அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

இந்நிலையில் நேற்றும் கருவூலத்துக்கு அருகே சிறிய நாகப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதனை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த பாம்பு தலையை தூக்கி சீறியதால் அச்சம் அடைந்த ஊழியர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.



அதற்குள் அந்த தேநீர் கடையில் வேலை செய்து வரும் வாலிபர் தண்ணீர் பாட்டிலைக் கொண்டு லாவகமாக அந்த சிறிய பாம்பை பிடித்தார்.



இதனை தொடர்ந்து மீட்பு படையினரிடம் அந்த பாம்பு ஒப்படைக்கப்பட்டு வனத்தில் விடப்பட்டது.



கடந்த சில நாட்களாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் அடிக்கடி பாம்புகள் உலாவி வருவது தொடர்கதையாகி வரும் நிலையில் புதர் மண்டி உள்ள இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் பழைய கட்டிடத்தில் இயங்கி வரும் கருவூலத்தை இடமாற்ற வேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...