தாராபுரத்தில் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய தையல் தொழிலாளி போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் பகுதியில் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய தையல் தொழிலாளியை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: வீட்டிற்கு வந்த மனைவியின் தங்கையிடம் ஆசை வார்த்தை கூறி திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்ட தையல் தொழிலாளியின் செயல் அப்பகுதி மக்களை எரிச்சலடைய வைக்கும் வகையில் உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான தையல் தொழிலாளி. இவரது மனைவியின் தங்கை 17 வயது சிறுமி ஆவார்.

சிறுமி அவ்வப்போது தனது அக்காள் வீட்டுக்கு வந்து சென்று வந்துள்ளார். அப்போது தையல் தொழிலாளி தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக வீட்டில் கூறினார். இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து சிறுமியிடம் கேட்டபோது தனது அக்காள் கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் விசாரனை மேற்கொண்டு தையல் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...