துடியலூரில் எமன் வேடமணிந்து வாகன ஓட்டிகளுக்கு கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே எமன் வேடமணிந்த கல்லூரி மாணவர் ஒருவர் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



கோவை: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு எவ்வாறு பின்பற்ற வேண்டும் மற்றும் முதலுதவி குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு அதற்கான விழிப்புணர்வு கார்டுகளை மாணவர்கள் கொடுத்தனர்.



கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே துடியலூர் போக்குவரத்து துறை, அலார்ட் தொண்டு நிறுவனம் மற்றும் போர்ட் மோட்டார் ஐடி கம்பெனி ஆகியோர் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.



இதில் சாலையில் வரும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து இருந்தால் அவர்களுக்கு வாழ்த்துகள் அட்டை மற்றும் சாக்லெட்கள் வழங்கப்பட்டன.



ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு எவ்வாறு பின்பற்ற வேண்டும் மற்றும் முதலுதவி குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு அதற்கான விழிப்புணர்வு கார்டுகளையும் தந்தனர்.



இதில் கலந்துக்கொண்ட கல்லூரி மாணவர் ஒருவர் எமன் போல வேடமிட்டு கையில் பாசக்கயிறுடன் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு உயிர் இழக்க வேண்டும் என்னுடன் மேலே வந்துவிட வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாணவ, மாணவிகள் கையில் பதகைகளுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...