எதிர்கால விதை தேவைக்கான உத்திகள் கடைக்கோடி விவசாயி வரை சென்றடைய வேண்டும்- முனைவர் மு.பாஸ்கரன்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதை மையத்தில் மூன்றாவது வருடாந்திர கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பல்கலைக்கழக நிர்வாகிகள், விதை சான்றளிப்புத் துறை இயக்குனர்கள், 50-க்கும் மேற்பட்ட வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள், தனியார் விதை நிறுவன அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



தமிழ்நாடு விதை உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கி.காளிதாஸ், விதை சான்றளிப்புத் துறை இணை வேளாண் இயக்குனர் ஆர்.பாண்டியராஜ் மற்றும் வேளாண் பல்கலைக்கழக பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் முனைவர். கே.கணேசமூர்த்தி ஆகியோர் தரமான விதை உற்பத்தி, அதில் உள்ள முறன்பாடுகள் பற்றிய முக்கியத்துவத்தை விளக்கினர். 



வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் முனைவர். எம்.மகேஷ்வரன், விதை தூய்மை, உயிர் தொழில்நுட்ப முறையில் விதையின் உண்மை தன்மை கண்டறிதல் மற்றும் வீரியமான விதை உற்பத்தி முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பரிந்துரைத்தார்.



தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். மு.பாஸ்கரன், தனது விழா உரையில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப விதைகளின் தன்மையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தி வேளாண் உற்பத்திக்கு வகை செய்யும் முறைகளை முன் வைத்தார்.

எதிர்கால விதை தேவைக்கு ஏற்ற உத்திகளையும், பல்கலைகழகங்கள், விதை உற்பத்தியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பினையும் பல்கலைக் கழக ஆராய்ச்சியினை கடைமட்ட பயனாளிகளான விவசாயிகள் வரை எடுத்து செல்வது பற்றியும், இதில் உள்ள குறைபாடுகளை தவிர்ப்பது பற்றியும் சிறப்பாக விவரித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். கு.இராமசாமி தனது சிறப்புரையில் எண்ணெய்வித்து பயிர்களின் உற்பத்தி பற்றியும் சிறப்பான முறையில் இடைநில்லா விதை வழங்குவது பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார்.

மேற்கத்திய நாடுகளின் ஆராய்ச்சிகளையும் உற்பத்தி முறைகளையும் நம் நாட்டில் இன்றைய சூழ்நிலையில் நிலவும் தன்மையை உணர்ந்து இந்தியாவில் சிறப்பான விதை உற்பத்தி திட்டம் வகுக்கப்படுவதையும் எடுத்துரைத்தார்.

விவசாய பெருமக்களுக்காகவே நாம், அவர்களின் வாழ்வாதரம் உயரும்போதே நாடும் வளம்பெறும் என எடுத்துரைத்தார். விவசாய ஆராய்ச்சியால் காணப்படும் குறைபாடுகளை நீக்கி அவற்றினை நிவர்த்தி செய்து முன்னேற்றப்பாதையில் வேளாண் உற்பத்தியினை கொண்டு செல்வது பற்றியும் எடுத்துரைத்தார்.

இவ்விழாவின் ஒரு பகுதியாக கருத்தரங்க கையேட்டினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். கு.இராமசாமி வெளியிட தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். மு.பாஸ்கரன் பெற்றுக்கொண்டார்.



முன்னதாக வேளாண் பல்கலைக்கழக தனி அலுவலர் (விதைகள்) முனைவர் பொ.செல்வராஜு வரவேற்புரையாற்றினார். இறுதியில் வேளாண் பல்கலைக்கழக விதை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப துறை தலைவர் முனைவர். ஆர். உமாராணி நன்றியுரையாற்றினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...