பேருந்து விபத்தில் கால் இழந்த மாணவி - வழக்கை விரைந்து முடிக்க கோரி ஆட்சியரிடம் மனு!

திருப்பூரில் பேருந்து விபத்தில் கால் இழந்த பள்ளி மாணவி பிரியா, அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் வீடு வழங்க வேண்டும் என்றும் வழக்கை விரைந்து முடித்து இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி, ஆம்புலன்ஸ் மூலம் ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தார்.



திருப்பூர்: பேருந்து விபத்தில் கால் இழந்த பள்ளி மாணவி பிரியா வழக்கை விரைந்து முடித்து இழப்பீட்டு தொகை வழங்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரியா ‌, தாய் இல்லாத நிலையில் தனது தந்தை மற்றும் அக்காவுடன் விரபாண்டி பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார்.

அப்போது பள்ளி செல்வதற்காக தனது வீட்டில் இருந்து அரசு பேருந்தில் வந்தவர் புஷ்பா பஸ் நிறுத்தம் பகுதியில் இறங்கி சாலையில் கடக்கும் போது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் பிரியாவின் இடது கால் முழுவதும் சிதலமடைந்தது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவிற்கு தமிழக அரசு சார்பில் மருத்துவ செலவு ஏற்கப்பட்டது. அதேபோல் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து திருப்பூர் வீரபாண்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வீடு வழங்கப்பட்டது.

இதுகுறித்து மாணவி பிரியா கூறியதாவது,

அடுக்குமாடி குடியிருப்பில் எங்களுக்கு மேல் தளத்தில் வீடு வழங்கப்பட்டு உள்ளதால், சிகிச்சைக்கு செல்வதற்கும் மற்றும் அவசர தேவைக்கு சொல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ஊனமுற்றோருக்கான கீழ்தளத்தில் வீடு வழங்க வேண்டும்.

நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து முடித்து தனக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் தற்போது மீண்டும் வலி ஏற்பட்டு வருகிறது.

தற்போது சிகிச்சை அளிப்பதற்க்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதோடு, சிகிச்சைக்கான செலவையும் அரசே ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட ப்ரியா தனது சகோதரி உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...