இம்மானுவேல் சேகரனாரின் 66ஆம் ஆண்டு குருபூஜை விழா! தாராபுரத்தில் அனுசரிப்பு.!

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி தாராபுரத்தில் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறையினர் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.



திருப்பூர்: தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுநாளையொட்டி, தாளக்கரை கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட இளைஞரர்கள் மது அருந்தமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அரசியல் தலைவருமான சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு நாள் செப்டம்பர் 11ஆம்தேதி இன்று அனுசரிக்கப்படுகிறது.



அதன் ஒரு பகுதியாக தாராபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66 வது நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறையினர் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.



இந்தவிழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜ சோழன் தலைமை தாங்கினார். தாராபுரம் மேற்கு தெரு சீராம்பாளையம், வீராட்சி மங்கலம், தாவாய்பட்டிணம், கரையூர், ஆகிய இடங்களிலும் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தாளக்கரை கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட இளைஞரர்கள் மது அருந்தமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...