கோவையில் மது போதையில் கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற மூதாட்டி கைது..!!

கோவையில் மது குடிக்கும் போது கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் கணவனை கட்டையால் அடித்தே கொன்ற மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கணவன் மனைவி இருவரும் அமர்ந்து மது குடிக்கும்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமனைந்த மூதாட்டி கணவனை கட்டையால் அடித்து கொன்றார்.

கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோடு, தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் லோகநாதன், 75. இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் போலீசார் விசாரனை நடத்தினர். இதில்லோகநாதனை, அவரது மனைவி தெய்வானை மரக்கட்டையால் அடித்து, கொலை செய்தது தெரிந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட தெய்வானை, போலீசாரிடம் கூறியதாவது: எனது கணவர் லோகநாதனுக்கு வேலை இல்லை. நான் வீட்டு வேலைகளுக்கு சென்று வந்தேன். மகன் மணிகண்டன் செல்வபுரத்தில் குடியிருந்து வருகிறார். எங்களுக்கு மதுப்பழக்கம் உள்ளது.

நேற்று முன்தினம் இருவரும், வீட்டில் மது குடித்தோம். போதையில் தகராறு ஏற்பட்டது. அப்போது எனது கணவர், என்னை கைகளால் தாக்கினார். பதிலுக்கு, நான் வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து தாக்கினேன். அவர் பலத்த காயம் அடைந்து, உடனே இறந்து விட்டார் என போலீசாரிடம் தெய்வானை கூறினார். இதனையடுத்து தெய்வானையை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...