கோவையில் மது போதையில் கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற மூதாட்டி கைது..!!

கோவையில் மது குடிக்கும் போது கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் கணவனை கட்டையால் அடித்தே கொன்ற மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கணவன் மனைவி இருவரும் அமர்ந்து மது குடிக்கும்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமனைந்த மூதாட்டி கணவனை கட்டையால் அடித்து கொன்றார்.

கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோடு, தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் லோகநாதன், 75. இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் போலீசார் விசாரனை நடத்தினர். இதில்லோகநாதனை, அவரது மனைவி தெய்வானை மரக்கட்டையால் அடித்து, கொலை செய்தது தெரிந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட தெய்வானை, போலீசாரிடம் கூறியதாவது: எனது கணவர் லோகநாதனுக்கு வேலை இல்லை. நான் வீட்டு வேலைகளுக்கு சென்று வந்தேன். மகன் மணிகண்டன் செல்வபுரத்தில் குடியிருந்து வருகிறார். எங்களுக்கு மதுப்பழக்கம் உள்ளது.

நேற்று முன்தினம் இருவரும், வீட்டில் மது குடித்தோம். போதையில் தகராறு ஏற்பட்டது. அப்போது எனது கணவர், என்னை கைகளால் தாக்கினார். பதிலுக்கு, நான் வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து தாக்கினேன். அவர் பலத்த காயம் அடைந்து, உடனே இறந்து விட்டார் என போலீசாரிடம் தெய்வானை கூறினார். இதனையடுத்து தெய்வானையை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...