நிலத்திற்கு இழப்பீடு கேட்டு 29வது நாளாக தாராபுரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்..!!

தாராபுரம் நல்லதங்காள் ஓடை நீர் தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் முழு இழப்பீடு தொகை கேட்டு 29-ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: தமிழர் முன்னணி இயக்கப் பொதுச் செயலாளர் இமயம் சரவணன் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்த காணிக்கை கட்டுமான பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கடந்த 1997 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.

அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு தொகை வழங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்து நிலத்தைப் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் விவசாயிகள் கூறியவாறு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கவில்லை. இழப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரையின்படி இழப்பீட்டுத் தொகை வட்டியுடன் சேர்த்து கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 ஆண்டுகள் ஆகியும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.



இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமலே இறந்துவிட்டனர். இருப்பினும் தற்போது உள்ள 150 விவசாயிகள் கோனேரிப்பட்டி பகுதியில் கடந்த 29 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



நேற்று 29-வது நாள் தொடர் காத்திருக்கு போராட்டத்தில் விவசாயிகளுடன் தமிழர் முன்னணி இயக்க பொதுச்செயலாளர் இமயம் சரவணன் விவசாயிகளுடன் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...