சனாதனம் விவக்காரத்தில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..!! கோவை மாநகர காவல் ஆணையரிடம் இந்து அன்னையர் முன்னணி அமைப்பு புகார்.!

சனாதனம் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க கோரி இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.



கோவை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் கேட்டுகொண்டனர்.

சென்னையில் கடந்த இரண்டாம் தேதி சனாதனம் ஒழிப்பு மாநாட்டை தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். சிலவற்றை நாம் ஒழிக்க தான் ஆக வேண்டும். எதிர்க்க முடியாது கொசு டெங்கு மலேரியா கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்து கட்ட வேண்டும் அப்படித்தான் இந்த சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணி என்று பேசியிருந்தார்.



இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...