தார் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் மாசு..!! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியில் உள்ள தார் தயாரிக்கும் தொழிற்சாலையால் தங்கள் பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய்களுக்கு ஆளாகுவதாக கூறி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.



கோவை: தார் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசுக்காற்றை சுவாசிக்கும் கால்நடைகளுக்கு கூட மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியில் தார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து வெளியேறும் மாசால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே அந்த தார் தயாரிக்கும் தொழிற்சாலையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த தார் தொழிற்சாலை சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக தெரிவித்த அப்பகுதி மக்கள் அதனால் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் வருவதாகவும் குழந்தைகள், முதியவர்கள் சிரமப்படுவதாகவும் விவசாய நிலங்கள், கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...