வால்பாறையில் வனத்துறை பயிற்சி மையத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..!!

கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறை பயிற்சி மையத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்ஆணைமலை புலிகள் காப்பக கல இயக்குனர் பார்க்கவ தேஜா, வால்பாறை உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.



கோவை: வால்பாறையில் உள்ள பொது மக்கள் வன விலங்குகளை பார்த்தல் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியும். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு வன விலங்குகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியாது என்றும் சுற்றுலா பயணிகளை 6 மணிக்கு மேல் செல்ல தடை செய்வதை ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகம் வந்து செல்கின்றனர். சில தினங்களுக்கு முன்பாக வனத்துறையினர் ஆழியார் சோதனை மையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வால்பாறைக்கு செல்ல அனுமதிக்கபடும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு பலகையால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக குறைந்ததாக வால்பாறையில் உள்ள ஓட்டுனர் சங்கம், தங்கும் விடுதி உரிமையாளர் சங்கம், சுற்றுலாவை நம்பி இருக்கும் அனைவருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று வனத்துறையால் வைக்கப்பட்ட அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.



இது தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் ஆணைமலை புலிகள் காப்பக கல இயக்குனர் பார்க்கவ தேஜா முன்னிலையில் வால்பாறை உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள் ஓட்டுநர் சங்கத்தில் சங்கத்தினர் அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வனத்துறையினர் தெரிவிக்கையில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது ஆறு மணிக்கு மேல் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க சாலை ஓரங்களில் நடந்து செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வரும்பொழுது மனித வன விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வன விலங்குகளை சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்தனர்.



இதனால் 6 மணிக்கு மேல் வால்பாறை செல்வதை குறைக்க வேண்டும். வால்பாறையில் உள்ள பொது மக்கள் வன விலங்குகளை பார்த்தல் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியும். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு வன விலங்குகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியாது என்றும் சுற்றுலா பயணிகளை 6 மணிக்கு மேல் செல்ல தடை செய்வதை ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...