துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநரின் வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

துணை வேந்தர் நியமனத்தில் தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக பல்கலைக்கழக மானிய குழுவின் பிரதிநிதியையும் சேர்த்து தேடுதல் குழுவை அமைத்துள்ள ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநரின் வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை தேர்வு செய்வதற்கு முதல்முறையாக பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதியையும் சேர்த்து தேடுதல் குழுவை அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.

இதுவரை தமிழ்நாட்டில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது நான்காவதாக பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினர் ஒருவரும் சேர்த்து குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் இந்த புதிய குழு உறுப்பினர் சேர்க்கையை எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ்நாடு ஆளுனர் தமிழக அரசுடனும் உயர்கல்விதுறை அமைச்சருடனும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக தேடுதல் குழுவை அறிவித்துள்ளதாகவும், இது தமிழகத்தின் வரம்புகளுக்கு மாறாகவும் வரம்பு மீறிய செயல் போன்றது என தெரிவித்தனர்.



தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர் ஆர் எஸ் எஸ் சிந்தனை உடையவராக இருப்பதாகவும் குற்றம்சாட்டிய மாணவர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...