உதயநிதி ஸ்டாலினை கைது செய்யக் கோரி துடியலூரில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் - 130 பேர் கைது!

சனாதனத்திற்கு எதிராக பேசிய தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வலியுறுத்தி, கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: அமைச்சர் உதயநிதியை கைது செய்ய வலியுறுத்தி கோவை துடியலூரில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்து தர்மத்தையும், சனாதனத்தையும் இழிவுப்படுத்தி பேசியதாக கூறி இந்து அமைப்புகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட கோட்ட பொறுப்பாளர் உருவை பாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வடக்கு மாவட்ட பொதுசெயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய்கார்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சனாதனத்திற்கு ஆதரவாகவும், உதநிதியை கைது செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.



இதில், நிர்வாகிகள் படையப்பா, முருகன், தம்பி சரவணன், இந்து வியாபாரிகள் சங்கம் மாவட்ட தலைவர் முருகானந்தம், ஜீவானந்தம், அசோக், திவாகர், ரஞ்சத், ஸ்ரீனிவாசன் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.



கொட்டும் மழையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால் காவல்துறை துணை கமிஷனர் சண்முகம் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 130 இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...