கோவையில் கடைக்குள் புகுந்த கார்: ஒரு ஆண் உட்பட 3 பேர் காயம்..! எப்படி விபத்து ஏற்பட்டது என காவல்துறை விசாரனை

கோவையில் வேகமாக வந்த கார் ஒன்று நிலைத்தடுமாறி சாலையோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்தது. இதில் காரை ஓட்டிவந்தவரும், அதில் பயணம் செய்த இரண்டு பெண்களும் படுகாயமடைந்தனர்.


கோவை: சாலையோரத்தில் இருந்த கடைக்குள் கார் புகுந்த விபத்து ஏற்படுத்தியது சாலையில் சென்றவர்களை பதபதவைக்கும் வகையில் இருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

கோவை-திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர் போலீஸ் நிலையம் அருகே இன்று காலை ஒரு கார் வேகமாக வந்தது. அப்போது நிலைதடுமாறி அருகில் உள்ள கடைக்குள் புகுந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஒரு ஆண் மற்றும் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடைக்குள் கார் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக ரோட்டில் சென்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...