கிருஷ்ண ஜெயந்தி விழா - தாராபுரம் கோவில்களில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு சிறப்பு வழிபாடு!

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி தாரபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு அழைத்து வந்து வழிபட்டனர். அப்போது குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.



திருப்பூர்: தாராபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு வழிபாடு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள ஏராளமான கோவில்களில் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது.

மகாவிஷ்ணுவின் 8-வது அவதாரம் கிருஷ்ணர் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகு லாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் ரோகினி நட்சத்திரமும், அஷ்டமி திதியும் வரும் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டு பூஜை அறையில் கிருஷ்ணர் சிலை வைத்து, மா இலை தோரணங்கள் கட்டி, அரிசி மாவினால் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தையின் பாதங்கள் பதித்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.



இதனையொட்டி, தாராபுரம் அக்ரஹாரம் தெருவிலுள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது.



அங்கு ஏராளமான பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து அழைத்து வந்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல தாராபுரம் கரூர் செல்லும் சாலையில் ராஜவாய்க்கால் அருகே அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.



இதில் குழந்தைகள் கிருஷ்ணன், ராதா உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் வந்திருந்தனர்.



அப்போது அங்கு வந்திருந்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...