கிருஷ்ண ஜெயந்தி விழா - தாராபுரம் கோவில்களில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு சிறப்பு வழிபாடு!

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி தாரபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு அழைத்து வந்து வழிபட்டனர். அப்போது குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.



திருப்பூர்: தாராபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு வழிபாடு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள ஏராளமான கோவில்களில் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது.

மகாவிஷ்ணுவின் 8-வது அவதாரம் கிருஷ்ணர் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகு லாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் ரோகினி நட்சத்திரமும், அஷ்டமி திதியும் வரும் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டு பூஜை அறையில் கிருஷ்ணர் சிலை வைத்து, மா இலை தோரணங்கள் கட்டி, அரிசி மாவினால் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தையின் பாதங்கள் பதித்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.



இதனையொட்டி, தாராபுரம் அக்ரஹாரம் தெருவிலுள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது.



அங்கு ஏராளமான பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து அழைத்து வந்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல தாராபுரம் கரூர் செல்லும் சாலையில் ராஜவாய்க்கால் அருகே அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.



இதில் குழந்தைகள் கிருஷ்ணன், ராதா உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் வந்திருந்தனர்.



அப்போது அங்கு வந்திருந்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...