கிருஷ்ண ஜெயந்தி விழா - தாராபுரம் கோவில்களில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு சிறப்பு வழிபாடு!

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி தாரபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு அழைத்து வந்து வழிபட்டனர். அப்போது குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.



திருப்பூர்: தாராபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு வழிபாடு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள ஏராளமான கோவில்களில் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது.

மகாவிஷ்ணுவின் 8-வது அவதாரம் கிருஷ்ணர் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகு லாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் ரோகினி நட்சத்திரமும், அஷ்டமி திதியும் வரும் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டு பூஜை அறையில் கிருஷ்ணர் சிலை வைத்து, மா இலை தோரணங்கள் கட்டி, அரிசி மாவினால் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தையின் பாதங்கள் பதித்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.



இதனையொட்டி, தாராபுரம் அக்ரஹாரம் தெருவிலுள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது.



அங்கு ஏராளமான பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து அழைத்து வந்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல தாராபுரம் கரூர் செல்லும் சாலையில் ராஜவாய்க்கால் அருகே அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.



இதில் குழந்தைகள் கிருஷ்ணன், ராதா உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் வந்திருந்தனர்.



அப்போது அங்கு வந்திருந்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....