உடுமலையில் காவல்துறையை கண்டித்து டி.எஸ்.பி அலுவலகம் முற்றுகை!

உடுமலை அடுத்த தும்பலபட்டி கிராமத்தில் இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.



திருப்பூர்: உடுமலை அருகே காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் டி எஸ் பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள தும்பலப்பட்டி ஊராட்சியில் நேற்று முன்தினம் விநாயகர் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.



இந்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு தரப்பினருக்கு மட்டும் ஏழு பேர் கைது செய்யபட்டதை கண்டித்து தும்பலபட்டி ஊராட்சி சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காவல்துறையினர் ஒரு தலைபட்சமாகநடந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் கிராம மக்கள் தரப்பில் கொடுத்தமனுவில் உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் உறுதிஅளிக்கபட்டதால் ஓரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற போராட்டம் தற்காலிமாக முடிவுக்கு வந்தது.

இருப்பினும் காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர். உடுமலையில் காவல்துறையை கண்டித்து டிஎஸ்பிஅலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...