வால்பாறை அருகே டீசல் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து!

வால்பாறை அடுத்த வாட்டர்பால்ஸ் பகுதியில் டீசல் ஏற்றி வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தீப்பற்றாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



கோவை: வால்பாறை அருகே வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் டீசல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இருந்து வால்பாறை போக்குவரத்து பணிமனைக்கு காளி என்பவர் டீசல் லாரியை ஒட்டி வந்து உள்ளார். அந்த லாரியில் 12 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்து உள்ளது.



இந்நிலையில், வால்பாறைக்கு வரும் வழியில் வட்டார்பால்ஸ் என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த லாரியானது, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுனர் எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பினார்.



இதனிடையே விபத்தில் சிக்கிய லாரியை ஒட்டி வந்த ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில், லாரியில் இருந்து டீசல் சாலையில் வெளியேறி உள்ளது.



இதுகுறித்து தகவலறிந்த தீ அணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தீ பற்றாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாலையில் ஓரம் பகுதியில் லாரி விழுந்து உள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை. மேலும் லாரியில் உள்ள டீசலை வேறு லாரிக்கு மாற்றப்பட்டு, பின் விபத்துக்குள்ளான லாரியை ஜேசிபி மூலம் அகற்றப்படும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...