துடியலூர் அரவான் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்..!! பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம்.!

கோவை துடியலூர் அரவான் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.



கோவை: 300 ஆண்டுகள் பழமையான அரவான் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. கோபுர கலசங்கள் மற்றும் மூலமூர்த்திகள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

கோவை துடியலூர் அரவான் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



கோவை துடியலூரில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ அரவான் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் அரவான் திருவிழாவானது குருடி மலை அடிவாரத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், ஆரப்பாளையம், தாலியூர், பாப்பநாயக்கன்பாளையம், பன்னிமடை, பழனிகவுண்டர்புதூர், அப்பநாய்க்கன்பாளையம், வடமதுரை, வெள்ளகிணர், சுப்பிரமணியம் பாளையம், காசிநஞ்சகவுண்டன்புதூர், ராக்கிபாளையம், வெற்றிலை காளிபாளையம், தொப்பம்பட்டி மற்றும் துடியலூர் என பதினாறு கிராமங்கள் பங்கேற்கும் விழாவாக 18 நாட்கள் நடைபெறும். அவ்வளவு பெருமை வாய்ந்த கோயில் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கடந்த 1-ம் தேதி முளைப்பாரி, தீர்த்த குடங்களுடன் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா தொடங்கியது. தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, அம்மன் வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து 2ம் நாளில் முதல் கால வேள்வி பூஜை தொடங்கியது. அதனையடுத்து இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கிய விழாவில் இரண்டாம் கால வேள்வி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. அதனை அடுத்து யாகசாலை மண்டபத்தில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பட்டு திருக்கோயிலை வலம் வந்தது.



பின்னர், கோவிலின் கோபுர கலசங்கள் மற்றும் மூலமூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...