கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நாய்களுக்கான போட்டி..!! நாய்களின் சிகை அலங்காரத்தை பார்த்து பார்வையாளர்கள் வியப்பு..!

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஸ்பார்க்லிங் ஸ்டார்ஸ் என்ற தனியார் அமைப்பு இணைந்து நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் காவல்துறையை சார்ந்த 30 நாய்களும், பொதுமக்கள் சார்பில் இருந்து 20க்கும் மேற்பட்ட நாய்களும் பங்கேற்று தனித்திறனை வெளிக்காட்டின.



கோவை: நாய்களுக்கான போட்டியில் விதவிதமாக சிகை அலங்காரம் செய்து தங்களது செல்லப்பிராணிகளை போட்டியில் பங்கேற்க வைப்பதற்காக உரிமையாளர்கள் ஆர்வமுடன் அழைத்து வந்திருந்தனர். இந்தப்போட்டியை நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.



கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஸ்பார்க்லிங் ஸ்டார்ஸ் என்ற தனியார் அமைப்பு இணைந்து நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.



மாநகர காவல் துணை ஆணையர் சுகாசினி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காவல்துறையை சேர்ந்த துப்பறியும் மோப்ப நாய்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டில் வளர்த்து வரும் நாய்கள் பங்கேற்றன.



போட்டியில், காவல்துறையினரின் கட்டளைக்கு கீழ்படிதல், குற்றப்பிரிவு, வெடிமருந்து கண்டறிதல் மற்றும் போதைப்பொருள் கண்டறிதல் ஆகிய பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.



பொது மக்களுக்கான போட்டியில், 3 நிமிடத்தில் நாய்கள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தும் போட்டி நடைபெற்றது.



இதில் கோவை, ஊட்டி, ஈரோடு, மதுரை, தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இருந்து 30 காவல்துறையை சேர்ந்த நாய்களும், 20க்கு மேற்பட்ட பொதுமக்களின் நாய்களும் கலந்து கொண்டது.



போட்டிகளை பார்ப்பதற்கு 100க்கு மேற்பட்ட தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் வந்திருந்தனர்.



இதில் நாட்டு வகை நாய்களான சிப்பி, கன்னி வகை நாய்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பொதுமக்கள் சிலர் அவர்கள் வளர்த்து வரும் நாய்களுக்கு ஆடைகள் அணிந்து அழைத்து வந்திருந்தது அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்ட நாய்களின் உரிமையாளர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கபட்டன.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...