கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நாய்களுக்கான போட்டி..!! நாய்களின் சிகை அலங்காரத்தை பார்த்து பார்வையாளர்கள் வியப்பு..!

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஸ்பார்க்லிங் ஸ்டார்ஸ் என்ற தனியார் அமைப்பு இணைந்து நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் காவல்துறையை சார்ந்த 30 நாய்களும், பொதுமக்கள் சார்பில் இருந்து 20க்கும் மேற்பட்ட நாய்களும் பங்கேற்று தனித்திறனை வெளிக்காட்டின.



கோவை: நாய்களுக்கான போட்டியில் விதவிதமாக சிகை அலங்காரம் செய்து தங்களது செல்லப்பிராணிகளை போட்டியில் பங்கேற்க வைப்பதற்காக உரிமையாளர்கள் ஆர்வமுடன் அழைத்து வந்திருந்தனர். இந்தப்போட்டியை நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.



கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஸ்பார்க்லிங் ஸ்டார்ஸ் என்ற தனியார் அமைப்பு இணைந்து நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.



மாநகர காவல் துணை ஆணையர் சுகாசினி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காவல்துறையை சேர்ந்த துப்பறியும் மோப்ப நாய்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டில் வளர்த்து வரும் நாய்கள் பங்கேற்றன.



போட்டியில், காவல்துறையினரின் கட்டளைக்கு கீழ்படிதல், குற்றப்பிரிவு, வெடிமருந்து கண்டறிதல் மற்றும் போதைப்பொருள் கண்டறிதல் ஆகிய பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.



பொது மக்களுக்கான போட்டியில், 3 நிமிடத்தில் நாய்கள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தும் போட்டி நடைபெற்றது.



இதில் கோவை, ஊட்டி, ஈரோடு, மதுரை, தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இருந்து 30 காவல்துறையை சேர்ந்த நாய்களும், 20க்கு மேற்பட்ட பொதுமக்களின் நாய்களும் கலந்து கொண்டது.



போட்டிகளை பார்ப்பதற்கு 100க்கு மேற்பட்ட தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் வந்திருந்தனர்.



இதில் நாட்டு வகை நாய்களான சிப்பி, கன்னி வகை நாய்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பொதுமக்கள் சிலர் அவர்கள் வளர்த்து வரும் நாய்களுக்கு ஆடைகள் அணிந்து அழைத்து வந்திருந்தது அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்ட நாய்களின் உரிமையாளர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கபட்டன.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...