சுங்கம் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் அமைச்சர் கயல்விழி திடீர் ஆய்வு!

சுங்கம் பகுதியில் நிர்மலா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அங்கு தேவைப்படும் வசதிகள் மற்றும் உணவுகளின் தரம் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தார்.


கோவை: சுங்கம் பகுதியில் நிர்மலா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஆதிதிராவிடர் மாணவியர்கள் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொள்கிறார். அதன் ஒரு நிகழ்ச்சியாக சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா கல்லூரி வளாகத்திற்கு எதிரில் அமைந்துள்ள ஆதிதிராவிட மாணவியர்கள் விடுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர், அங்குள்ள வசதிகள் குறித்தும் தேவைப்படும் வசதிகள் குறித்தும் மாணவிகளிடம் கேட்டறிந்தார்.



மேலும் அங்குள்ள உணவுகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ் உட்பட பல உடன் இருந்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...