திருப்பூரில் கல்குவாரிகள் மீது நடவடிக்கை தேவை.. குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை..

கோவை மாவட்டத்தில் முறைகேடாகவும் வெடிவைத்து கற்களை உடைத்தும் மாசு ஏற்படுத்தும் கல் குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட அலுவலக கூட்டறங்கில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கூட்டம் இன்று நடைபெற்றது.



இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.



குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முறைகேடாக கல் குவாரிகள் இயக்கப்பட்டு வருவதாகவும், ஒரு சில இடங்களில் அரசு அனுமதி இல்லாமல் வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்படுவதாகவும், இதனால் மாசு ஏற்படுவதோடு அருகில் கால்நடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று புகார் தெரிவித்தனர்.

எனவே, அதனை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...