திருப்பூரில் கல்குவாரிகள் மீது நடவடிக்கை தேவை.. குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை..

கோவை மாவட்டத்தில் முறைகேடாகவும் வெடிவைத்து கற்களை உடைத்தும் மாசு ஏற்படுத்தும் கல் குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட அலுவலக கூட்டறங்கில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கூட்டம் இன்று நடைபெற்றது.



இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.



குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முறைகேடாக கல் குவாரிகள் இயக்கப்பட்டு வருவதாகவும், ஒரு சில இடங்களில் அரசு அனுமதி இல்லாமல் வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்படுவதாகவும், இதனால் மாசு ஏற்படுவதோடு அருகில் கால்நடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று புகார் தெரிவித்தனர்.

எனவே, அதனை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...