திருப்பூரில் கல்குவாரிகள் மீது நடவடிக்கை தேவை.. குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை..

கோவை மாவட்டத்தில் முறைகேடாகவும் வெடிவைத்து கற்களை உடைத்தும் மாசு ஏற்படுத்தும் கல் குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட அலுவலக கூட்டறங்கில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கூட்டம் இன்று நடைபெற்றது.



இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.



குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முறைகேடாக கல் குவாரிகள் இயக்கப்பட்டு வருவதாகவும், ஒரு சில இடங்களில் அரசு அனுமதி இல்லாமல் வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்படுவதாகவும், இதனால் மாசு ஏற்படுவதோடு அருகில் கால்நடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று புகார் தெரிவித்தனர்.

எனவே, அதனை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...