விபத்தில் மரணமடைந்த ஒப்பந்தத் துப்புரவுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு மாநகராட்சி ஆணையர் ஆறுதல்


கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், பணியிலிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த ஒப்பந்தத் துப்புரவுப் பணியாளர் ரமேஷின் குடும்பத்தினரை இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு 81-ல் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்த எஸ்.ரமேஷ் என்பவர் கடந்த 8.03.2017 அன்று பணியிலிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தார்.

அவரின் குடும்பத்தினரை இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், ஒப்பந்த துப்புரவுப் பணியாளராக பணியில் இருந்த போது உயிரிழந்த ரமேஷின் குடும்பத்திற்கு சேரவேண்டிய இழப்பீட்டுத் தொகை மற்றும் இதர பயன்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், பணியின் போது இறந்த ஒப்பந்த பணியாளருக்கு ஈடாக அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்குவதற்கு அரசு ஆணையில் வழிவகை இருப்பின் அவற்றை ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். 

இந்த நிகழ்வின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் துப்புரவுப் பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...