சின்னதடாகம் அருகே செங்கல் சூளையில் இருந்து பழைய இரும்புகளை திருடிய நபர் கைது!

சின்னத்தடாகம் அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய அஜீஸ் என்பவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்த நிலையில், அவரிடம் இருந்து 47 கிலோ பழைய இரும்பு மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.



கோவை: சின்னத்தடாகம் அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சின்னத்தடாகம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட செங்கல் சூகள் உள்ளன. சமூக நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற பிரப்பித்த உத்திரவு காரணமாக கடந்த 4 வருடங்களாக செங்கல் சூளைகள் செயல்படாமல் உள்ளன.

இந்த நிலையில் சின்னத்தடாகம் அருகில் உள்ள வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள MVN சேம்பர் என்ற செங்கல் சூளையில், நேற்று இரவு புகுந்த மர்ம நபர், அங்கு செயல்படாமல் இருந்த இயந்திரத்தில் இருந்து பழைய இரும்புகளை திருடிக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தடாகம் போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த அஜீஸ் என்பதும் இவர் அங்கிருந்த செங்கல் சூளையில் இருந்து பழைய இரும்புகளை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



அவரிடம் இருந்து 47 கிலோ பழைய இரும்பு மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...