தாய்மார்களின் சகோதரனாக பிரதமர் மோடி மானியத்தை உயர்த்தி கேஸ் விலையை குறைத்துள்ளார் - வானதி சீனிவாசன் பெருமிதம்!

கோவை தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்ற ரக்‌ஷா பந்தன் விழாவில் பங்கேற்ற பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் மக்கள் பயனடைந்து உள்ளதாக தெரிவித்தார்.


கோவை: தாய்மார்களின் சகோதரனாக மானியத்தை உயர்த்தி கேஸ் விலையை பிரதமர் மோடி குறைத்துள்ளார் என பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



கோவை பூ மார்க்கெட் அருகில் உள்ள தெப்பக்குளம் மைதானத்தில் முன் களப் பணியாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடினார்.



பின்னர் முன் கள பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த விழாவில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பேசியதாவது,



ரக்ஷா பந்தன் மற்றும் ஓணம் பண்டிகையை ஒட்டி இந்திய நாட்டு சகோதரிகள் நலம் பெறும் வகையில் ஒரு சகோதரனாக சமையல் கேஸ் விலையை குறித்து மானியத்தை அதிகப்படுத்தி உள்ளார். ஒரு சகோதரனாக, சகோதரிக்கு அண்ணன் செய்வதை போன்று நாட்டு மக்களுக்கு மோடி மானியத்தை குறைத்து உள்ளார்.

நாட்டிலேயே 75 லட்சம் மக்கள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனடைந்து இருக்கிறார்கள். இது வரவேறக் கூடிய ஒன்று நாட்டு மக்கள் சகோதரிகள் இதனால் நலம் பெற உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...