கோவையில் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர்..! - பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவை மாவட்டத்தில் பணியில் சிறந்து விளங்கிய பெருமாள், சுரேஷ், ரஞ்சித்குமார் ஆகிய காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாரட்டி வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு நபரை, அவரிடம் பேசி தற்கொலை எண்ணத்தை மாற்றி உயிரை காப்பாற்றி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்த கோவில்பாளையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பெருமாளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாரட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு நபரை, அவரிடம் பேசி தற்கொலை எண்ணத்தை மாற்றி உயிரை காப்பாற்றி, குடும்பத்தினரிடம் கோவில்பாளையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பெருமாள் ஒப்படைத்தார்.

இதேபோல், கோவில்பாளையம் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர்களை காவலர் சுரேஷ் அதிரடியாக களத்தில் இறங்கி பிடித்தார்.

பீளமேடு அருகே பொதுமக்களை மிரட்டும் வகையில் கத்தி வைத்துக் கொண்டிருந்த நபரை பிடித்து அதிரடிப்படையைச் சேர்ந்த காவலர் ரஞ்சித் குமார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்த மூன்று பேரையும், இன்று (30.08.2023) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.



மூன்று காவலர்களின் இந்த நற்செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டி, சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...