கோவை மலுமிச்சம்பட்டியில் லாரியின் டேங்கர் வெடித்த பயங்கரம்..!! வெல்டிங் வைத்தவர் உயிரிழப்பு…

மலுமிச்சம்பட்டியில் வெல்டிங் வைக்கும் பணியின் போது லாரியின் டேங்கர் திடீரென வெடித்து சிதறியது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீல் துடிதுடித்து உயிரை விட்டார்.



கோவை: டேங்கர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தநிலையில், மற்றொருவரும் ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள கடையொன்றில் டேங்கர் லாரியின் டேங்கருக்கு வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டேங்கர் திடீரென வெடித்து சிதறியது.



இதில் வெல்டிங் வைத்துக்கொண்டிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீல் என்பவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரவி என்பவர் படுகாயமடைந்தார்.

அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் கிடைத்து நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...