டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியரிடம் குடியிருப்பு வாசிகள் நேரில் மனு

காங்கேயம் வட்டம் சிவன்மலை கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைய உள்ள டாஸ்மாக் கடையை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர்: பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு குடியிருப்பு பகுதியில் புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையை அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் கேட்டுகொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம் சிவன்மலை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகன்றனர். இந்த கிராமத்தை சுற்றி சந்தியாநகர், பள்ளகாட்டுபுதூர் உள்ளிட பல்வேறு ஊர்கள் உள்ளன.

இதனிடையே தற்போது சிவன்மலை கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த டாஸ்மாக் கடை அமைய உள்ள இடமானது பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பகுதியாக உள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு அன்றாடம் சென்று வரக்கூடிய பகுதியில் இந்த டாஸ்மாக் கடை அமைந்தால் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.



அதுமட்டுமின்றி பெண்களும் இந்த பகுதியை அச்சத்துடனை கடந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகும். எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து இந்த பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் கடையை தடை செய்ய வேண்டும் என குடியிருப்பு வாசிகள் மனு அளித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...