தாராபுரம் அருகே போலி மருத்துவர் நடத்தி வந்த மருத்துவமனைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாசநாயக்கன்பட்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த தனலட்சுமி என்பவரின் மருத்துவமனைக்கு திருப்பூரைச் சேர்ந்த மருத்துவத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காத போலி மருத்துவர் நடத்தி வந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாசன்நாயக்கம்பட்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி தலைமையில், அருண்பாபு, ஹரி மற்றும் கோபால கிருஷ்ணன் ஆகிய அதிகாரிகள் தாசநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனலட்சுமி என்பவரின் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், மருத்துவமனையை நடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (50) முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த தனலட்சுமி என்பவரின் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.



கடந்த ஆறு மாத காலங்களாக போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தது தாசநாயக்கன்பட்டி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், முறையாக மருத்துவம் படிக்காமல் தாசநாயக்கன்பட்டி பகுதியில் போலி மருத்துவர் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதேபோல் தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் முறையாக மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவர்கள் உள்ளனரா என அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தாராபுரம் சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...