தாராபுரத்தில் அரசு டாக்டர் வீட்டில் 9 பவுன் நகை மாயம் - திருட்டு மூதாட்டிக்கு சிறைத்தண்டனை

தாராபுரத்தில் டாக்டர் வீட்டில் வேலைப் பார்த்துக்கொண்டு, ஒன்பது பவுன் நகைகளை திருடிச்சென்ற கஸ்தூரி என்ற மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.



திருப்பூர்: வீட்டு வேலை பார்த்த டாக்டர் வீட்டிலேயே சிறிது சிறிதாக ஒன்பது பவுன் நகைகளை மூதாட்டி திருடி அடகு வைத்தது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த பொன் கார்த்திகேயன் மனைவி வித்யா. இவர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டு வேலைக்கு தாராபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த ஞான பிரகாசம் மனைவி கஸ்தூரி (வயது58) என்பரை வீட்டு வேலைக்கு வைத்துள்ளார்.

இவர் தினசரி டாக்டர் வீட்டிற்கு சமையல் செய்வது மற்றும் துணிகளை துவைப்பது, வீட்டை பெருக்குவது போன்ற வீட்டு வேலைகளை செய்து வந்தார். தெரிந்த மூதாட்டி என்று நம்பி வீட்டை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுவார்கள்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கஸ்தூரி டாக்டர் வீட்டில் இருந்து சிறிது சிறிதாக நகைகளை திருடி சென்றுள்ளார். இது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த வித்யா 9 பவுன் நகைகள் காணாமல் போனது குறித்து கஸ்தூரியிடம் கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதுகுறித்து வித்யா தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுததார்.

புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் பெண் போலீசார், கஸ்தூரியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது டாக்டர் வீட்டில் திருடப்பட்ட 9 பவுன் நகைகளை அடகு வைத்துள்ளதாக கூறி நகைளை திருடியதை ஒப்புக்கொண்டார்.



இது குறித்து போலீசார் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து நகையை பறிமுதல் செய்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...