தாராபுரத்தில் அரசு டாக்டர் வீட்டில் 9 பவுன் நகை மாயம் - திருட்டு மூதாட்டிக்கு சிறைத்தண்டனை

தாராபுரத்தில் டாக்டர் வீட்டில் வேலைப் பார்த்துக்கொண்டு, ஒன்பது பவுன் நகைகளை திருடிச்சென்ற கஸ்தூரி என்ற மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.



திருப்பூர்: வீட்டு வேலை பார்த்த டாக்டர் வீட்டிலேயே சிறிது சிறிதாக ஒன்பது பவுன் நகைகளை மூதாட்டி திருடி அடகு வைத்தது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த பொன் கார்த்திகேயன் மனைவி வித்யா. இவர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டு வேலைக்கு தாராபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த ஞான பிரகாசம் மனைவி கஸ்தூரி (வயது58) என்பரை வீட்டு வேலைக்கு வைத்துள்ளார்.

இவர் தினசரி டாக்டர் வீட்டிற்கு சமையல் செய்வது மற்றும் துணிகளை துவைப்பது, வீட்டை பெருக்குவது போன்ற வீட்டு வேலைகளை செய்து வந்தார். தெரிந்த மூதாட்டி என்று நம்பி வீட்டை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுவார்கள்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கஸ்தூரி டாக்டர் வீட்டில் இருந்து சிறிது சிறிதாக நகைகளை திருடி சென்றுள்ளார். இது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த வித்யா 9 பவுன் நகைகள் காணாமல் போனது குறித்து கஸ்தூரியிடம் கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதுகுறித்து வித்யா தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுததார்.

புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் பெண் போலீசார், கஸ்தூரியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது டாக்டர் வீட்டில் திருடப்பட்ட 9 பவுன் நகைகளை அடகு வைத்துள்ளதாக கூறி நகைளை திருடியதை ஒப்புக்கொண்டார்.



இது குறித்து போலீசார் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து நகையை பறிமுதல் செய்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...