249 கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு - 44.593 கிலோ குட்கா, பான்மசாலா பறிமுதல்

கோவையில் 249 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு நடத்தியதில் அரசால் தடைசெய்யப்பட்ட 44.593 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வணிகம் மேற்கொள்வது கண்டறிய நேரிட்டால் 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் முழுவதும் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன், தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் களஆய்வு மேற்கொண்டனர். இந்த கள ஆய்வு சுமார் 249 கடைகளில் மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது 249 கடைகளில் சுமார் 44.593 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளான பான்மசாலா மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.



பறிமுதல் செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்காவின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய். 44,593 ஆகும். களஆய்வின் முடிவில் முதல் முறை குற்றம் புரிந்த 24 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களான பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்த 249 கடைகளுக்கு அபராதமாக ரூபாய்.5000 வீதம் மொத்தம் ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற திடீர் கள ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடைபெறும் எனவும், தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வணிகம் மேற்கொள்வது கண்டறிய நேரிட்டால் 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...