உடுமலை அருகே சாலையில் உலா வந்த படையப்பா யானை - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!

உடுமலை அருகே தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மறையூர் பேருந்து நிலையம் அருகே படையப்பா என்ற யானை , உடுமலை - மூணாறு சாலையில் உலா வந்ததை கண்டதும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே மறையூர் பேருந்து நிலையம் பகுதியில் படையப்பா யானை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மறையூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே படையப்பா என்ற யானை, உடுமலை - மூணாறு சாலையில் உலா வந்ததை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுநர்களும் அச்சமடைந்து வாகனங்களை சாலையோரம் நிறுத்தினர்.



ஆனால் அந்த யானை எந்தவித அசம்பாவிதமும் செய்யாமல் சாலையை கடந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேயிலை தோட்டத்தை நோக்கி சென்றதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

இருப்பினும் வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...