காரமடையில் காவல்துறை சார்பில் சமூகநீதி விழிப்புணர்வு முகாம்!

கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள அன்சூர் என்ற பழங்குடியினர் கிராமத்தில் காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களிடையே சமூகநீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


கோவை: காரமடை அருகே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு காவல்துறை சார்பில் சமூக நீதி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல்துறை,சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை சார்பில் பழங்குடியினர், ஆதிதிராவிட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தம் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் காரமடை அன்சூர் பழங்குடியின கிராமத்தில் காவல்துறை ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக வழங்கப்பட்டு வரும் தமிழக முதலமைச்சரின் நலத்திட்டங்கள், மக்களின் உரிமைகள் ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது தீண்டாமையை ஒழிப்போம், ஒற்றுமையை வளர்ப்போம். சேர்ந்து வாழ்வோம், சாதி ஏற்றத்தாழ்வுகளை மறந்து வாழ்வோம் என்பவை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி (பொறுப்பு) முரளி கலந்து கொண்டு பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். வெள்ளியங்காடு கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...