காரமடையில் காவல்துறை சார்பில் சமூகநீதி விழிப்புணர்வு முகாம்!

கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள அன்சூர் என்ற பழங்குடியினர் கிராமத்தில் காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களிடையே சமூகநீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


கோவை: காரமடை அருகே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு காவல்துறை சார்பில் சமூக நீதி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல்துறை,சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை சார்பில் பழங்குடியினர், ஆதிதிராவிட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தம் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் காரமடை அன்சூர் பழங்குடியின கிராமத்தில் காவல்துறை ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக வழங்கப்பட்டு வரும் தமிழக முதலமைச்சரின் நலத்திட்டங்கள், மக்களின் உரிமைகள் ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது தீண்டாமையை ஒழிப்போம், ஒற்றுமையை வளர்ப்போம். சேர்ந்து வாழ்வோம், சாதி ஏற்றத்தாழ்வுகளை மறந்து வாழ்வோம் என்பவை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி (பொறுப்பு) முரளி கலந்து கொண்டு பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். வெள்ளியங்காடு கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...