நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் ஆய்வு - குடும்ப அட்டைத்தாரர்களுக்கு உரிய நேரத்தில் பொருட்கள் வழங்குமாறு விற்பனையாளரிடம் அறிவுறுத்தல்

கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம், என்.ஜி.ராமசாமி சாலையில் அமைந்துள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடை, லட்சுமி மில் பணியாளர் கூட்டுறவு பண்டக சாலை, நியாய விலைக் கடை, 100 அடி சாலையிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நியாய விலைக் கடை ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் ஆகியவற்றை அவர் கேட்டறிந்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய நேரத்தில் பொருட்கள் வழங்கவும் விற்பனையாளர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.



பாப்பநாயக்கன்பாளையம், என்.ஜி.ராமசாமி சாலையில் அமைந்துள்ள கோயம்புத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம் குறித்த பதிவுகளை விற்பனை முனைய இயந்திரத்தினை இயக்கி ஆய்வு செய்ததுடன், இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்தார்.

மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்கவும் விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...