சந்திரயானை சுமக்கும் விநாயகர் - கோவை நகை வடிவமைப்பாளர் அசத்தல்

சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்க உள்ளதை முன்னிட்டு விநாயகர் சந்திரயான் விண்கலத்தை தாங்கி நிற்பது போன்று கோவையைச் சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா வடிவமைத்துள்ளது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


கோவை: தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா என்பவர் விநாயகர் சந்திரயானின் விக்ரம் லேண்டரையும், நிலவையும் சுமப்பது போன்று வடிவமைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ளநிலையில், களிமண்ணை கொண்டு வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் விண்கலத்தின் கடைசி வெற்றி நொடிகளை பார்க்க இந்தியா மற்றும் பல்வேறு நாடுகள் காத்திருக்கிறது.இதனிடையே கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா என்பவர் விநாயகர் சந்திரயானின் விக்ரம் லேண்டரையும், நிலவையும் சுமப்பது போன்று வடிவமைத்து அசத்தியுள்ளார்.

களிமண்ணை கொண்டு விநாயகரை வடிவமைத்த அவர், சந்திரயான் விண்கலத்துடன் நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரையும், நிலவையும் தாங்கி பிடித்தவாறு வடிவமைத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியும் அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்திராயன் சதுர்த்தி என்ற தலைப்பில் இதனை வடிவமைத்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...