முன்பகை காரணமாக டிரைவர் வெட்டிக்கொலை - குற்றவாளியை பிடித்து கோவை மத்திய சிறையில் அடைத்த காவல்துறை

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் முன்பகை காரணமாக டிரைவர் ரவியை கொலை செய்த செல்வராஜ் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



கோவை: திருட்டு பொருட்களை விற்பனை செய்ததை தட்டிக்கேட்டதால், டிரைவர் ரவியை, செல்வராஜ் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கடையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே கடையில் செல்வராஜ் என்பவர் வேலை பார்க்கின்றனர். செல்வராஜ் திருட்டு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார் இதனை ரவி கண்டித்துள்ளார்.

இந்நிலையில் ரவி நேற்று முந்தினம் வேலைக்கு சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை என தெரிகிறது. எனவே, அதிர்ச்சி அடைந்த அவரது மகன் நந்தகுமார் கடைக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது செல்வராஜ் வீட்டிற்கு ரவி சென்றது தெரிய வந்தது.

எனவே நந்தகுமார் அங்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ரவி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் நந்தகுமார் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அதே கடையில் பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் முன் விரோதம் காரணமாக ரவியை அறிவாளால் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த செல்வராஜை நேற்று பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கைது எனவே அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...