வீட்டில் தஞ்சமடைந்த பெண் புள்ளி மான் - வனத்துறையினர் பத்திரமாக மீட்பு

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறிய பெண் புள்ளிமான் ஒன்று வழித்தெரியாமல் முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்குள் புகுந்தது. அவற்றை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வடக்கு காப்பு காடு என்ற பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.


கோவை: வீட்டில் பெண் புள்ளி மான் ஒன்று தஞ்சமடைந்திருப்பதாக வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்ற வனப்பணியாளர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும், புள்ளிமானை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஆணைகட்டி பகுதியில் உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பெண் புள்ளிமான் ஒன்று வழி தவறி வந்து தஞ்சமடந்துள்ளதாக வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.



இதனையடுத்து வனச்சரக அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் வன பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பெண் புள்ளிமானை பத்திரமாக மீட்டு, ஆனைக்கட்டி காவல் சுற்று, ஆனைக்கட்டி வடக்கு காப்பு காடு பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...