கோவையில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் - பாஜக நிர்வாகியின் புது வீட்டிற்கு வருகை

கோவை துடியலூர் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக நிர்வாகியின் இல்லத்திற்கு நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் வருகை தந்தார். அப்போது, மோகன்குமாரின் புது வீட்டை சுற்றிப்பார்த்து ஆசி வழங்கி அவரது குடும்பத்தினருடன் கவர்னர் போட்டோ எடுத்துக்கொண்டார்.



கோவை: பாஜக நிர்வாகி மோகன்குமாரின் புதிய வீட்டிற்கு வருகைதந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், இங்கு வந்தது இனிமையாக இருப்பதாக கருத்து தெரிவித்தார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட 7வது வார்டு பாலாஜி நகர் பகுதியில் வசிப்பவர் பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவை சேர்ந்த மாநில துணைத்தலைவர் மோகன்குமார். இவர் யுபிவிசி தொழில் செய்து வருகிறார். இவர் பாலஜி நகர் பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு புதிய வீடு கட்டி கிரகபிரவேசம் செய்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் கோவை காரமடை அடுத்துள்ள ஓன்னிபாளையத்திற்கு வந்துள்ளார். தொடர்ந்து துடியலூர் அருகே பாலஜிநகர் பகுதியில் உள்ள மோகன்குமார் வீட்டிற்கு வந்தார்.



அவரை மோகன்குமார் குடும்பத்தினர் பூச்சென்டு கொடுத்து வரவேற்று உபசரித்தனர். தொடர்ந்து வீட்டை சுற்றி பார்த்த கவர்னர் இல.கணேசன் மோகன்குமார் குடும்பத்தினருக்கு ஆசி வழங்கி அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

மேலும் அங்கு அவரைக் காணவந்திருந்தவர்கள் அனைவருடனும் போட்டோ எடுத்துக்கொண்டார். தொடர்ந்து நிருபர்களிடம் கூறும்போது, தான் சொந்த வேலையாக வந்ததாகவும், அத்துடன் மோகன்குமார் மற்றும் நண்பர்களை பார்த்து செல்லலாம் என்று இங்கு வந்ததாகவும், இங்கு வந்தது இனிமையாக இருந்தது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, பா.ஜ.கவை சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் ப்ரீத்தி லட்சுமி, அசோகபுரம் ஊராட்சி 7 வது வார்டு கவுன்சிலர் பார்த்திபன், இந்து முன்னணி வடக்கு மாவட்ட பொதுசெயலாளர் தியாகராஜன், கவுன்சிலர் சுதாகர், சசிகுமார், பூஜி என்கிற அருண்குமார், விமல்பாலாஜி, முகேஷ்ராஜ், நந்தகோபால், விஷ்ணு மற்றும் பாலாஜி நகர் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...